vendredi 24 août 2007

ஒரு பாத்துப்பாடடா
எனது பாட்டா தம்பர்
- கனக்ஸ் -
நான் ஆனா, ஆவன்னா சொல்லியே ஒரு உயிரைச் சாக அடித்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ தெரியாது. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். அப்போ எனக்கு வயது மூன்று இருக்கலாம். எனது பாட்டாவிற்கு ஏறக்குறைய எண்பது வயது. முழுமையான விவசாயி. கடினமாக உழைத்தவர், திடகாத்திர உடம்பு, நல்ல உயரம், செம் பொன்மேனி பற்கள் மாத்திரம் காலம் செய்த கோலத்தால் விடை பெற்று விட, வாய் கொஞ்சம் பொக்கு வாயாக,கதையில் மெல்லிய மழலை. நரைத்த மயிரில் உதிர்ந்தது போக எஞ்சியது உச்சியில் கொட்டைப் பாக்கு அளவு சிறிய குடும்மியாக காட்சி தந்தது. ஒருகாலும் படுத்திடாத என் பாட்டாவிற்கு ஏதோ ஒரு நோய் வந்து படுக்கையில் கிடத்தியது. மானிப்பாய் வைத்தியசாலையில் வைத்தியம். “இனி உள்ளக நோயாளியாhய் வைத்திருப்பதில் ஒன்றும் ஆகப் போவதில்லை வீட்டுக்குக் கொண்டு போய் அவர் விருப்பியதைக் கொடுங்கள் நிம்மதியாகப் போகட்டும்” என டாக்டர்கள் ஆலோசனை கூற வீட்டுக்குக் கொண்டு வந்து நாட்களை எண்ணத் தொடங்கியது சுற்றம். அவரோ பந்த பாசத்தைத் துறப்பதாக இல்லை. ஒரு மயக்க நிலை , அவ்வளவு தான். ஊர் உலகம் வௌ;வேறு ஆலோசனை கூற எனது தந்தையார்; அவற்றினை நிறைவேற்றத் தவறவில்லை. முதலில் ‘தானம்’ கொடுக்கச் சொன்னார்கள். தானம் கொடுத்தால் ஐயர் மாட்டை வீட்டுப்படலைக்கு அப்பால் கொண்டு போக உயிரும் போய்விடும் என்றார்கள். வீட்டிலே உள்ளதில் கிழட்டு மாடு ஐயருக்குத் தானமாகப் போனது. ஐயரும் விகடராமன் குதிரை ஓட்டிய மாதிரி “ முன்னே மூன்று போர் பற்றி இழுக்க பின்னே இருந்து இரண்டு போர் தள்ள- எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காத வழி” என்றாராம் காள மேகப் புலவர் எப்படியோ மாட்டினை ஓட்டிச் சென்றாh.; பாட்டாவோ நடப்பதை வேடிக்கை பார்த்த படி கிடந்தார்.” கிழவனுக்குச் சேடம் இழுக்குது, கோரோசனை பாலில் கரைத்துக் கொடுத்தால் தொண்டை திறந்து விடும் ஆவி போய் விடும்” என இன்னொரு ஆலோசனை. அதுவும் நிறைவேற்றப் பட்டது. உற்றார் உறவினர் எல்லோரும் வரிசையில் நின்று பக்தி சிரத்தையுடன் கரண்டியால் பாட்டாவின் பொக்கு வாயில் பாலை ஊற்றினார்கள். இங்கே, பிள்ளையாருக்கு ஊற்றினார்களே, அதே போல ஊற்றுவதெல்லாம் உள்ளே தங்கு தடையில்லாமல் போனது .ஆனால் உயிர் மாத்திரம் போகவில்லை. என் பாட்டாவின் வேட்டி மூலைகளில் எல்லாம் எப்பவும் காசு முடிச்சு இருக்கும். இதை அறிந்த ஊர்ப் பெரிசு ஒன்று “ எடே கிழவனுக்கு காசு ஆசை விடுகுதில்லையடா, காசைக் கரைத்து வாயிலை ஊற்றிப் போட்டுப் பாருங்கோடா என்ன நடக்குது எண்டு” என்றது.அதுவும் நடந்தது.பாட்டா” சிற்றம்பலமும் சிவலோகமும் வேண்டாம், வெற்றம்பலமே போதும்” என நீட்டிக் கிடந்தார். “ எங்களுக்கு வேறை வேலை இல்லையா.? வாருங்கோடா போவோம், கிழம் போற நேரம் போகட்டும”; என்று அலுப்படைந்த சுற்றத்தில் ஒரு பகுதி நீங்கியது. மற்றையது கிழவன் போற இடத்துக்காவது புண்ணியத்தோடு போகட்டும் என முறை வைத்து தேவாரம், திருவாசகம், திருப்பு என்று சொல்வார்கள். தொடர்ந்து ஓதத் தொடங்கியது. அப்பொழுது தான் இந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. பாட்டா திடீரெனக் கண்ணை முழித்து என்னைப் பார்த்தார். பாட்டாவுக்கு என்னில் நல்ல பிரியம்.” தம்பி இங்கே வாதா” என்றார். நான் பயந்தேன்.”பாட்டா கூப்பிடுகிறார் இல்லே, போவேன்” என என்னை எல்லொரும் கிட்டப் போகுமாறு சொன்னார்கள். நான் போனேன். என்னை தன் ஒளி மங்கிய கணகளால் உற்றுப் பார்த்தபடி “ ஒரு பாத்துப் படியதா தம்பி” என்றார். நான் பேந்தப்பேந்த முழித்தேன். எனக்கோ ஒரு பாட்டும் தெரியாது. "அம்மா மெத்தப் பசிக்கிறதோ” “ருவிங்கிள், ருவிங்கிள் லிற்றில் ஸ்ராறோ” சொல்லித்தர ஒருவரும் அப்போ இல்லை. “ கிழவன் கேக்குது இல்லை, ஒரு பாட்டைப் படியேன்ரா மோனை”, இது தேவாரம் பாடியவர்களின் வேண்டு கோள். இக்கட்டான நிலமை.யோசித்தேன். ஒரே வழி. ஆனா, ஆவன்னா என ராகமுடன்
-2-( கர்ணகடூரம்) இழுத்தேன். “ ஒரு நல்ல பாத்துப் படியதா தம்பி” என பாட்டா மீண்டும் கேட்டார். கிழவனுக்குக் கேக்கேல்லை எடா, காதுக்குள்ளே சொல்லு” என்றனர். நானும் பவ்வியமாக பாட்டாவின் காதுக்குள்ளே " அனா, ஆவன்னா” எனக் கத்தினேன். அவ்வளவுதான். “சீ, போ, மூ-----“ என்ற பாட்டாவின் வாய் மீண்டும் மூடவில்லை. “ஐயோ, தம்பர் அப்பா ( அது தான் அவரின் பெயர்) போய் விட்டாயோ என எல்லோரும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். பாட்டியோ ஒடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து “என தாலியை அறுத்து விட்டியே எடா” எனக் கதறத் தெடங்கினார். உடனே சுற்றியிருந்த பெரிசுகள் எல்லம் என்னைக் கட்டிப் பிடித்து ஓலமிடத் தொடங்கின. என் நல்ல காலம் அம்மா இடையே புகுந்து” விடுங்கோடி என்ரை பிள்ளையை “ என என்னை இழுத்து எடுக்காவிட்டால் இன்றைக்கு இதனை நீங்கள் வாசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க மாட்டாது. “போகுது இல்லை, போகுது இல்லைக் கிழம”; என்று சொல்லிக் கொண்டிருந்த பந்துக்களுக்குப் பாசம் எப்படித்தான் பொது;துக் கொண்டு வந்ததோ, ஆறாகப் பெருகியது கண்ணீர், முந்தானை மூக்கைச் சீற உதவியது, நான்கைந்து நாட்களாக ஆயத்தம் செய்த முகாரி ராகக் கீர்த்தனைகள் ஆரோகண அவரோகணங்களுடன் சீராய் புறப்பட்டன.
எது எப்படி என்றாலும் அன்றைக்குத் தொடக்கம் உள்@ர் சமூகத்திலே என் கௌரவம் சற்று ஏறு முகமாகவே அமைய ஆரம்பித்து விட்டது. ஓழுங்கையிலே என்னைத் தட்டித் தவறி முதியவர் எவராவது கண்டால் அவசர அவசரமாக மறுபக்கம் பார்த்துக் கொண்டு போவதைக் காண முடிந்தது. போதாக் குறைக்கு நான் படிப்பதற்காகப் பாடசாலை போன அன்றும் பனம் பழம் விழக் காகம் இருந்தது போல அசம்பாவிதம் ஒன்றும் நடந்தது. எங்கள் பக்கத்து வீட்டிலே தான் நாகலிங்க உபாத்தியாயர் வசித்து வந்தார். எங்களுக்கு நெருங்கிய உறவு. ஓய்வு பெறுகின்ற வயது. சிறாப்பர் பள்ளிக் கூடம் தான் எமது ஆரம்பப் பாடசாலை. நாகலிங்க உபாத்தியாயர் அங்கே ஆசிரியர். ஆசிரியர்கள் ஏணிகளாக இருப்பார்கள் என்றும் மாணவர் அதன் மூலம் ஏறி மேலே மேலே போவார்கள் என்றும் சொல்வார்களே, நாகலிங்கம் உபாத்தியாயர் அந்த ஏணியின் அடிப் படியாகவே என்றும் இருப்பவர்.சும்மா சொல்லப்படாது, முப்பது வருடங்களாக வீடு, அரிவரி வகுப்பு என்று வாழ்ந்த மனுசன். பள்ளிக் கூடத்துக்கு என்னை நாகலிங்க உபாத்தியாயர் தான் கூட்டிச் சென்று தன் வகுப்பிலே முதல் ஆசனத்தில் இருத்தினார். பள்ளிக் கூடம் ஆரம்பமானது. வாத்தியார் கரும் பலகையிலே “ அ” எழுதி விட்டு இது என்ன எழுத்து எனக் கேட்டார். எனக்கு ஆனாஇ ஆவன்னா நல்லாகத் தெரியும் தானே. நான் உடனே “ஆனா” எனக் கத்தினேன்.என் தலை விதி. உபாத்தியாயார்,”இக், இக்” என்றார். நெஞ்சைப் பிடித்த படி கீழே விழுந்தார்.அவரின் கதையும் முடிந்தது.அண்ணலும் நோக்க அவளும் நோக்கபாட்டிதான் எனக்கு உணவு ஊட்டுவது வழக்கம்.மற்றைய பாட்டிமார்களில் இருந்து என் பாட்டி வித்தியாசமானவர். மற்றவர்கள் இராமனைப் பற்றியும் அருச்சுனனைப் பற்றியும் கதை சொல்வார்கள். என் பாட்டிக்கோ இராமனும் பாட்டா தான், அருச்சுனனும் பாட்டா தான்.பாட்டி கன்னியாயிருந்த போது பாட்டா ஆணழகன். வெற்றுடம்புடன் உழவுக்கு இரண்டு வெள்ளை வெளேரென்ற வடக்கன் எருதுகள், நெடிய கொம்புகளுடன் முன்னே செல்ல தோழில் கலப்பையுடன் காம்பீரமாகப் பாட்டா பின்னே செல்வது மிதிலை வீதியிலே இராமன் வில்லோடு சென்ற காட்சிதான், பாட்டி வேலியை விலக்கிப் பார்த்துப் பரவசமாகி, “தோள் கண்டார் தோளே கண்டாருடன்” பாட்டாவின் தொடைக்கு மேல் வேட்டி நின்றதால் கமலத்தன்ன கால்களையும கண்டு சொக்கி நின்றது ஒரு நாளல்ல ஒரு சில நாட்கள். அண்ணலும் நோக்க அவளும் நோக்க,.கொல்லைக்குப் போன பாட்டியின் அப்பனும் நோக்க பாட்டி மிதிலையை விட்டு அயோத்தி வாசியானாள். வேலிக்கு மேலாலே இன்னும் கொஞ்சக் காலம் பார்க்க விடாமல் சட்டுப் புட்டு எனக் கல்யாணத்தை நடத்தி விட்டார்களே என பாட்டிக்கு மாத்திரம் சற்றுக் கவலை.
பாட்டா கடினமான உழைப்பாளி என்றேன் பாட்டி அதைச் சற்று வித்தியாசமாய” எடே அந்த மனுசன்ரை கோவணத்தக்குள்ளே சாமி முளைச்சதடா” என்ற கூறுவா. எனக்கு என்னவோ ‘முருகன் சாமியையும் பிள்ளையாhர் சாமியையும்’ மாத்திரம் தான் எனது -3-அம்மா அறிமுகப் படுத்தியிருந்தா. இதென்னடா புதுச் சாமி எனப் பாட்டியிடம் கேட்டேன். “அட மடச் சாம்பிராணி, பாட்டா வேர்க்க வேர்க்க வேலை செய்வதாலே மண்ணும், வேர்iவுயம் சாமி விதையும் அங்கே சங்கமம் ஆகி விட்டன” என்பார். நீண்ட காலத்துக்குப் பின்னர் தான் பாட்டியின் ஹாஸ்ய உணர்வு புரிந்தது.பாட்டாவின் வைத்தியம்அந்தக் காலத்திலே வயல்களிலே உழுவதற்கும், சூத்திரக் கிணறு இறைப்பதற்கும் எருது மாடுகளையே பாவிப்பார்கள். அவை இரண்டு வகைப் படும். நமது நாட்டு உள்@ர் மாடுகளை ‘ வன்னி மாடுகள்’ என்பார்கள்.மற்றைய வகை ‘வடக்கன் மாடுகள்’ இவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. வெள்ளை நிறத்திலே, ஆறு அடிக்கும் மேலான உயரத்துடன், நீண்டு வளர்ந்த கொம்புகளுடன், உயர்நத் ஏரியோடு, மினு மினு என்ற உடலுடன் மிக்க காம்பீரமாக குதிரைகள் போன்று காணப் படும். பாட்டாவுக்கு மிருக வைத்தியமும் கொஞ்சம் கை வந்த கலை. ஆனால் என்றுமே அதற்காக ஊதியம் பெற மாட்டார். காசு வாங்கினால் சித்தியாகாது என்பது அவர் சித்தாந்தம். சில நிகழ்ச்சிகள் சொல்ல வேண்டும். ஊரிலே ஒருவருடைய எருது மாடு ஒன்று விழுந்து அதன் தொடை மூட்டு விலகி விட்டது. மாடு படுத்த படுக்கைதான் எவ்வளவு முயற்சித்தும் மாட்டினை எழுந்து நிற்கப் பண்ண முடியவில்லை. பாட்டாவை அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள். பாட்டா உடனே இரு வடக்கயிறும் பத்துத் திடகாத்திரமான ஆண்களையும் கொண்டு வருமாறு கோட்டார். வந்ததும் மாட்டின் வயிற்றினைச் சுற்றி ஒருகயிற்றாலும், பாதித்த காலில் ஓரு கயிறையும் கட்டினார். வயிறில் கட்டிய கயிறை ஒருபகுதியனர் இறுகப் பிடிக்க காலில் கட்டிய கயிறை மறுபகுதியினரை முதலில் இழுத்து பின் மெல்ல மெல்ல விடச் சொன்னார். மாடோ கத்து கத்தென்று கத்தியது. சிறிது நேரத்தின் பின் பாட்டா “எல்லாம் சரி இனி மாடு எழுந்து திரியும்” எனக் கூறி விட்டுப் போனார். ஆனால் இரண்டு நாட்களின் பின்பு மாட்டுக் காரர் மீண்டும் வந்தார். மாடு இன்னும் அதே இடத்தில், அதே நிலையில் இருப்பதாகச் சத்தியம் செய்தார். பாட்டாவின் சய கௌரவம் பாதிக்கப் பட்டது. எங்கே பார்ப்போம், வா வீட்டுக்கு என உடனேயே அங்கு சென்றார். பாட்டா மாட்டுக்குக் கிட்டேபோனதை மாடு கண்டது தான் தாமதம், ஒரு மாயம் நிழந்தது. அந்த இடம் வெற்றிடமானது. மாட்டைக் காணவில்லை. அஸ்வமேத யாகக் குதிரை என்பார்களே. அது மூவுலகுக்கும் போய்விடுமாம். மாடு எப்படி எழுந்ததோ, எங்கே போனதோ யார் அறிவார். மாட்டுக் காரர் மாட்டினைத் தேடிக் கண்டு பிடித்து கெஞ்சிக் கூத்தாடி அதனை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வர மூன்று நாட்கள் எடுத்ததாம்.
“ அக்குபங்சர்” என்று சீன மருத்துவ முறை ஒன்று உள்ளதே. ஊசியால் குது;துகிறார்களே. அது நம் நாட்டிலேயிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாட்டா இதனைச் சற்று வித்தியாசமான முறையிலே மாடுகளுக்குச் செய்வாராம். மாடுகளுக்கு “முன்னடைப்பன்” என ஒரு வருத்தம் வருவதுண்டாம். அப்போ மூச்சு விட முடியாமல் பல மாடுகள் இறந்து விடுவது உண்டாம். பாட்டா வின் வைத்தியம் இந்த நோய் தீர்ப்பதற்குக் கண்கண்ட ஒளசதம். ‘இயங்கு’ என ஒரு மரம் உண்டு அதன் கிளைகளில் எல்லாம் நிறைய முட்கள். இம் முட்கள் மிகச் சுலபமாகத் தண்டில் இருந்து பிரியக் கூடியவை. இயங்கு மரத்தின் கிளை ஒன்றினை வெட்டி நோயுற்ற மாட்டின் மூஞ்சியல் பாட்டா வேகமாக அடித்து விடுவார். முட்கள் அதிகம் மாட்டின் மூஞ்சியல் குத்திய படி நிற்கும். மாடு தும்மச் சளி வெளியேறும். சிறிது நேரத்தின் பின்னர் மாட்டின் முகத்தில் உள்ள முட்களை எடுத்து விடுவார்கள். இப்படியாக தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்தால் ஒன்றில் நோய் இருந்த இடம் தெரியாமல் போகும் அல்லது மாடு இருந்த இடம் காலியாகும்.
ஆடுமாடுகள் கன்றோ, குட்டியோ ஈனுவதற்குச் சில சமயங்களிலே க~;டப்படுவதுண்டு. உடலில் ஒரு பகுதி வந்துடன் நின்றுவிடுவதோ அல்லது முற்றாகவே ஈனுவதற்குக் க~;டப்பட்டோ உள்ள நிலையிலே பாட்டாவைத் தேடி வருவார்கள் ஊரார்கள். குட்டி அரைகுறையாக வெளியே நீட்டியபடி இருந்தால் பாட்டா ஒரு மகப்பேறு மருத்துவரின் இலாவகத்துடன் கையினை உள்ளே புகுத்திக் கன்றுடன் வெளியே வருவார். கன்று வெளியே தெரியாவிட்டால் பாட்டா, காட்டில் -4-வளரும் தாவரக் கொடி ஒன்று வைத்திருக்கிறார் அக் கொடியினை வாயடியில் வைத்து ஏதோ ஓதுவார் பினர் மூன்றுமுறை காறித் துப்பி விட்டு அக்கொடியினால் ஆட்டினதோ, மாட்டினதே வயிற்றினைச் சுற்றி இறுக்கக் கட்டிவிட்டுப் போய்விடுவார.; சிறது நேரத்தில் சுகப் பிரசவம் நடக்கும்.என்ன ஓதினார் என்பது இறுதிவரை மர்மமாவே இருந்தது. இந்த வைத்தியங்கள் எல்லாம் ஆண்தலை முறையாகவே செல்ல வேண்டும் என்பதில் பாட்டா மிகத் தீவிரமாக இருந்தவர். எனவே பாட்டியை இவ்விசயங்களில் சற்று எட்டவேதான் வைத்திருந்தார். இந்த சேவைகளுக்குப் பாட்டா எந்த விதமான ஊதியமும் பெறுவதில்லை எனக் கூறினேன். ஆனால் இதற்குப் பரதி உபகாரம் ஒன்று நடைபெறவதுண்டு.கன்று ஈன்றதும் மதலில் கன்றினை பால் ஊட்டவிடாமல் அப்பாலினைக் கநற்து விடுவார்கள். இப்பாலினைக் கடும்பு என்பாரகள். அதனைக் காச்சினால் வெண்கட்டிபோன்று வரும். மிகச் சுவையானதாக இருக்குமாம்.பாட்டாவிற்கு ஒரு பகுதியை அனுப்பி வைப்பார்களாம்.
இவை எல்லாம் பாட்டி நாளாந்தம் உணவூட்டும் போது சொன்ன தகவல்கள். புழுகு என நீங்கள் நினைத்தீர்களானால் அது பாட்டியின் கற்பனைத் திறத்திற்குப் பாராட்டு.

1 commentaire:

Anonyme a dit…

nalla pathivu. padikka suvayaf irunthathu.